"வேலை செய்ய கூடாது" - ஊழியரை பள்ளிக்குள் வைத்து பூட்டிய தலைமை ஆசிரியை - அரவக்குறிச்சியில் பரபரப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 26, 2022

Comments:0

"வேலை செய்ய கூடாது" - ஊழியரை பள்ளிக்குள் வைத்து பூட்டிய தலைமை ஆசிரியை - அரவக்குறிச்சியில் பரபரப்பு



வேலை செய்ய கூடாது" - அரசு ஊழியரை பள்ளிக்குள் வைத்து பூட்டிய தலைமை ஆசிரியை - அரவக்குறிச்சியில் பரபரப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி இளநிலை உதவியாளரை பள்ளி அலுவலகத்தில் வைத்து பூட்டி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றிவரும் செல்வ கதிரவன் என்பவர் மாலை 4.15 க்கு மேல் வேலை செய்து வந்துள்ளார். அப்போது தலைமை ஆசிரியை உமா 4.15 மணிக்கு மேல் வேலை செய்யக் கூடாது என கூறியுள்ளார். இதற்கு கதிரவன் மறுப்பு தெரிவித்ததால் தலைமை ஆசிரியை உமா, இளநிலை உதவியாளர் கதிரவனை பள்ளி அலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து கதிரவன் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களுக்கு போன் செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் தலைமை ஆசிரியரிடம் பேசி வரவழைத்து பள்ளி கதவை திறந்து விட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews