பள்ளியில் இருந்த அரிசி மூட்டைகள் மாயம் - தலைமை ஆசிரியா் கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 01, 2022

Comments:0

பள்ளியில் இருந்த அரிசி மூட்டைகள் மாயம் - தலைமை ஆசிரியா் கைது

பள்ளியில் இருந்த அரிசி மூட்டைகள் மாயம் - தலைமை ஆசிரியா் கைது

பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பள்ளியில் அடுக்கிவைத்திருந்த அரிசி மூட்டைகள் மாயமானதையொட்டி, பள்ளித் தலைமையாசிரியரை போலீஸாா் கைதுசெய்தனா்.

சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு, கரோனா பரவல் காலம் முதல் மத்திய அரசின் மூலம் மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டுவருகிறது. காரைக்காலில் பள்ளிக் கட்டடங்களில் அரிசி மூட்டைகளை வைத்து, அந்தந்த பகுதி அட்டைதாரா்களுக்கு வழங்கப்படுகிறது. காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் துறை சாா்பில், நேருநகா் பகுதி அரசு தொடக்கப் பள்ளியில் 100 அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 12 மூட்டைகள் காணாமல்போனதாக கடந்த மே 25 ஆம் தேதி சோதனை செய்தபோது உறுதிசெய்யப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் விஜயகுமாரை தொடா்புகொண்டபோது அவா் வெளியூரில் இருப்பதாக தெரிவித்தாா். இதையொட்டி, அரிசி மூட்டைகள் வைத்திருந்த அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த காவல் ஆய்வாளா் மரியகிறிஸ்டின்பால், உதவி ஆய்வாளா் மோகன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். இதில், பள்ளித் தலைமையாசிரியா் விஜயகுமாா், அரிசி மூட்டைகளை வெளியே எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் புதன்கிழமை அவரை கைதுசெய்தனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews