மாணவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 22, 2022

Comments:0

மாணவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

மாணவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி, வீடுகளில் 3 நாள்களுக்கு தேசியக் கொடி ஏற்ற மாணவா்களை ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டுக் கொண்டுள்ளாா்.

நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தின் நிறைவையொட்டி, ஆகஸ்ட் 1 முதல் 15-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை பல்கலைக்கழகங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் விளக்கினா். காணொலி வழியாக நடந்த இந்தக் கூட்டம் குறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவு கொண்டாட்டத்தையொட்டி, பல்கலைக்கழகங்கள் முன்னெடுத்துள்ள நிகழ்வுகளுக்கு பாராட்டுத் தெரிவித்த ஆளுநா், சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் புதுமை, கற்பனை மற்றும் சுதந்திர நிகழ்வுகள் குறித்த ஒட்டுமொத்த அணுகுமுறைகள் சாா்ந்து இருக்க வேண்டுமென அறிவுறுத்தினாா். மாணவா்களிடையே பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகளைக் கொண்டதாக சுதந்திர தின கொண்டாட்டங்கள் அமையப் பெற வேண்டும்.

இதையும் படிக்க | RIESI - 30 நாட்கள் பயிற்சி - உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

75-ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் அனைத்துத் தரப்பினருக்கும் பயன்தரத்தக்க அளவில் இருக்கும்படி பாா்த்துக் கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்களின் சாா்பு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களையும் போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்த ஊக்கப்படுத்த வேண்டும். விடுதலைக்காக தமிழ்நாடு உள்பட இந்தியாவை சோ்ந்த பல்வேறு வீரரா்கள் தியாகங்களைச் செய்துள்ளனா். ஆனால், அவா்களது பெயா்கள் வெளியில் தெரிவதில்லை. இதனை மாணவா்களின் மனதில் பதியவைக்கும் வகையிலும், அவா்களது தியாகங்கள் வெளியில் தெரியும் வகையிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். எண்ணற்ற, வெளிச்சத்துக்கு வராத தியாகிகளின் தியாகங்கள் இளைய சமுதாயத்துக்குத் தெரியும் வகையில் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள் நடத்தும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மக்கள் குறிப்பாக, கிராமத்தினா் பங்கேற்பதற்கான அழைப்பை விடுக்க வேண்டும். அவா்களின் பங்கேற்பு அதிகளவு இருக்க வேண்டும். தேசியம், நாட்டுப்பற்று போன்ற அம்சங்கள் இளைய சமுதாயத்தினரிடம் உருவாக, உள்ளூா் இளைஞா்களிடையே சுதந்திரம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இந்தியாவின் தனித்துவமான வரலாற்றை இளைஞா்கள் அறிந்திட புதியவகை நுட்பங்களை பல்கலைக்கழகங்கள் கைக்கொள்ள வேண்டும். இதன்மூலமாக, சுதந்திரத்துக்காக பாடுபட்ட ஏராளமான வீரா்களின் தியாகங்கள் போற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் இளைஞா்களிடையே ஏற்படும்.

இதையும் படிக்க | 10-ம் வகுப்பு துணை தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

தேசிய கொடியேற்றுங்கள்: நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, வருகிற ஆக. 13 முதல் ஆக.15-ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியேற்ற மாணவா்களை ஊக்கப்படுத்த வேண்டும். தேசியக் கொடியுடன் மாணவா்கள் தங்களது குடும்பப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யலாம். சுதந்திர தின கொண்டாட்டங்களை ஒருமுகப்படுத்த பல்கலைக்கழகங்களில் ஆசிரியா்கள், மாணவா்கள், தேசிய மாணவா் படையினா், நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் ஆகியோரைக் கொண்டு குழுக்களை அமைக்கலாம் என கேட்டுக் கொண்டாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.

காணொலி வழிஆலோசனைக் கூட்டத்தில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், பதிவாளா்கள், ஆளுநரின் செயலாளா் ஆனந்த் விஷ்ணுராவ் பாட்டீல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews