280 பெண்கள் பள்ளிகள், 164 ஆண்கள் பள்ளிகளை மூட உத்தரவு!! கல்வித்துறை அதிரடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يوليو 22، 2022

Comments:0

280 பெண்கள் பள்ளிகள், 164 ஆண்கள் பள்ளிகளை மூட உத்தரவு!! கல்வித்துறை அதிரடி

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாணவிகள், மாணவர்கள் என தனித்தனியாக பள்ளிகளும், இருபாலரும் பயிலும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் ஆண்கள், மகளிர் பள்ளிகள் குறைந்த அளவிலேயே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆண்கள், மகளிர் பள்ளிகள் குறித்து கேரள அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

இதையும் படிக்க | 72 மாணவர்கள் காயம்: ஆசிரியர் பணியிடை நீக்கம்

மாணவிகள்

கேரளாவில் மகளிர் பள்ளிகள் 280, ஆண்கள் பள்ளிகள் 164 என்ற அளவில் செயல்பட்டு வருகிறது. வருகிற கல்வியாண்டு முதல் (2023-2024) கேரளாவில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு அவற்றை இருபாலர் படிக்கும் பள்ளிகளாக மாற்றி இணைக்கல்வியை வழங்குவதற்கான திட்டத்தை அமல்படுத்த வேண்டும் குழந்தை உரிமைகள் ஆணையம் கேரள கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக பள்ளிகளில் உள்ள கழிவறை உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், மாணவர்கள், மாணவிகள் இணைந்து படிக்கும் இணைக்கல்வியின் அவசியம் குறித்தும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க | Announcement of Joint Entrance Examination (Main) – 2022 Session 2 (July 2022) - Reg

இந்த புதிய செயல் திட்டம் அடுத்த ஆண்டு கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து 90நாட்களுக்குள் செய்து முடித்துவிட வேண்டும் என்று கல்வித்துறையின் முதன்மை செயலாளர், பொதுக்கல்வி இயக்குநர் உள்ளிட்டோருக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة