72 மாணவர்கள் காயம்: ஆசிரியர் பணியிடை நீக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يوليو 21، 2022

Comments:0

72 மாணவர்கள் காயம்: ஆசிரியர் பணியிடை நீக்கம்

விழுப் புரம் மாவட்டம், செஞ்சி அரசுப் பள்ளியில் ஆசிரி யர் சரமாரியாக அடித்த தில், 72 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களது பெற்றோர் பள்ளியை முற் றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இயற்பியல் ஆசிரியரும் உதவித் தலைமையாசிரியருமான நந்தகோ பால் செவ்வாய்க்கிழமை தேர்வு நடத்தினார். பள்ளி மரத்தடியில் பிற்பகல் 12.30 மணியளவில்மாண வர்கள் தேர்வெழுதிக் கொண்டிருந்தனர்.

இதில், பெரும்பாலான மாணவர்கள் சரியாக விடையளிக்க வில்லை எனத் தெரிகிறது.

இதனால், கோபமடைந்த ஆசிரியர் நந்தகோபால் தேர்வெழுதிய மாணவர்களை மூங்கில் பிரம்பால் சரமாரியாக அடித்தாராம். இதில் சில மாணவர் களுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது. பலருக்கு முதுகு, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற மாண வர்கள், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தனராம்.

இதையும் படிக்க | முழுநேர பிஎச்.டி பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை - G.O Ms. No. 57 Dt: July 14, 2022

இதையடுத்து, பள்ளிக்கு புதன்கிழமை காலை வந்த பிளஸ் 2 மாண வர்களின் பெற்றோர், தலைமையாசிரியர் அறையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக தலைமையாசிரியரிடம் பெற்றோர் மனுக்களை அளித் தனர். இதைத் தொடர்ந்து, விழுப் புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் அறிவுறுத்தலின் பேரில், ஆசிரியர் நந்தகோபாலை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة