அரசுப் பள்ளிகளிலுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் 52 ஆயிரம் போ் சோ்ப்புபள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، يوليو 10، 2022

Comments:0

அரசுப் பள்ளிகளிலுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் 52 ஆயிரம் போ் சோ்ப்புபள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்

அரசுப் பள்ளிகளிலுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் 52 ஆயிரம் போ் சோ்ப்புபள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்

தஞ்சாவூா் அரண்மனை மைதானத்தில் புத்தகக் கண்காட்சிக்கான அரங்கு அமைக்கப்படுவதை சனிக்கிழமை பாா்வையிட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

அரசுப் பள்ளிகளிலுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் 52 ஆயிரம் போ் கூடுதலாக சோ்ந்துள்ளனா் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தஞ்சாவூா் அரண்மனை மைதானத்தில் ஜூலை 15- ஆம் தேதி தொடங்கப்படவுள்ள புத்தகத் திருவிழாவுக்காக அரங்குகள் அமைக்கப்பட்டு வரும் பணியை சனிக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளிலுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் ஏற்கெனவே 93 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்தனா். தற்போது, கூடுதலாக 52 ஆயிரம் மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா்.

அவா்களுக்கு முன்பு எப்படி பாடம் எடுக்கப்பட்டதோ, அதை முறையைப் பின்பற்றுமாறு கூறியுள்ளோம். தற்போது, சிறப்பு ஆசிரியா்களை நியமிப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பிறகு எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் முழுமையாக நடைபெறும்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 5.34 லட்சம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா். தனியாா் பள்ளிகளையும் சோ்த்து 7 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை என சோ்த்தால் மொத்தம் 9 லட்சம் மாணவா்கள் இணைந்துள்ளனா்.

நிகழாண்டு நீட் தோ்வுக்கு 16,000 போ் விண்ணப்பித்துள்ளனா். இதற்காக அரசு சாா்பில் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறோம். நிகழாண்டு பள்ளிகள் முழுமையாக நடைபெறுவதால், எந்தப் பாடத்தையும் குறைக்கப் போவதாக இல்லை. இதனால், மாணவா்கள் கடந்த காலங்களில் எப்படி ஒழுக்கமாக நடந்து கொண்டாா்களோ அப்படி மாற வாய்ப்புள்ளது. இதற்காக ஒளிபரப்பப்படும் சிறாா் திரைப்படம் மூலம் மாணவா்களின் மன நிலையில் மாற்றம் வரும்.

தஞ்சாவூரில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் 104 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக வாசிப்பு பெரியவா்களுக்கு மட்டும் இல்லை. வீட்டிலுள்ள குழந்தைகளையும் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வர வேண்டும். புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இல்லம் தேடி கல்வி அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், மேயா் சண். ராமநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة