3,552 காவலர் பணியிடங்கள் - தகுதி , வயது வரம்பு குறித்து முழு விவரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يوليو 29، 2022

Comments:0

3,552 காவலர் பணியிடங்கள் - தகுதி , வயது வரம்பு குறித்து முழு விவரம்

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட காலியாக உள்ள 3,552 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவடைகிறது.

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட காலியாக உள்ள 3,552 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவடைகிறது.

மேலும் இந்த பணியிடங்களுக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் மொத்த காலிப்பணியிடங்களில் 10% இடங்களில் விளையாட்டு பிரிவில் கீழ் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்குரிய பணியிடங்களில் 3% ஆதரவற்ற விதவைகளுக்கு (Destitute Widow) ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ஆட்சேர்ப்பில் துணை ராணுவப்படை வீரர்களுக்கு அளித்து வந்த சிறப்பு ஒதுக்கீட்டை தமிழக அரசு நீக்கியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة