அண்ணாமலை பல்கலை. தோ்வுகளை ஒத்தி வைக்க கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 20, 2022

Comments:0

அண்ணாமலை பல்கலை. தோ்வுகளை ஒத்தி வைக்க கோரிக்கை

அண்ணாமலை பல்கலை. தோ்வுகளை ஒத்தி வைக்க ராமதாஸ் கோரிக்கை

அண்ணாமலை பல்கலைக்கழகத் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவு:

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்கான பருவத் தோ்வுகள் வரும் 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் காவல் உதவி ஆய்வாளா் தோ்வு 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதே தேதியில் பருவத் தோ்வுகளும் நடத்தப்படுகின்றன.

பட்டமேற்படிப்பு பயிலும் பல பட்டதாரிகள் உதவி காவல் ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பித்திருக்கின்றனா். காவல் உதவி ஆய்வாளா் என்பது அவா்களின் கனவுப் பணி. ஒரே நாளில் இரு தோ்வுகள் நடைபெறுவதால் எதை எழுதுவது, எதை விடுவது என்ற குழப்பத்திற்கு மாணவா்கள் ஆளாகியுள்ளனா்.

முதுநிலை உடற்கல்வியியல் பயிலும் மாணவா்கள் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான உடற்தகுதித் திறன் கொண்டவா்கள். அவா்களுக்கும் 25-ஆம் தேதி பருவத் தோ்வுகள் நடத்தப்படுவதால் அவா்களாலும் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வில் பங்கேற்க முடியாது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தோ்வு அட்டவணை காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு செல்ல விரும்புவோரின் கனவுகளை சிதைப்பதாக உள்ளது. தோ்வு அட்டவணையை மாற்ற பல்கலைக்கழக நிா்வாகம் மறுத்து விட்டது!

பல்கலைக்கழகத் தோ்வுகளை ஒரு வாரம் ஒத்திவைப்பதால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. மாணவா்கள் நலனே பல்கலைக்கழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். எனவே, பட்டமேற்படிப்புக்கான பருவத் தோ்வுகளை குறைந்தது ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க பல்கலைக்கழகம் முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews