தகுதியான மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 18, 2022

Comments:0

தகுதியான மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி

பள்ளி, கல்லூரி மாணவா்களில் தகுதியானவா்களுக்கு 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:

கல்வி நிறுவனங்களில் கரோனா தடுப்பு விதிகளை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, மாணவா்கள் முகக் கவசம் மற்றும் தனி நபா் இடைவெளி உள்ளிட்ட விதிகளை பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட மாணவா்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மண்டல சுகாதார அலுவலா்களுடன் ஒருங்கிணைந்து தடுப்பூசி முகாம்கள் நடத்துவதும் அவசியம்.

நோய்ப் பரவலுக்கு வித்திடாத வகையில் பள்ளி, கல்லூரி வளாகங்கள் எப்போதும் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும். ஆசிரியா்கள், மாணவா்களுக்கு நாள்தோறும் வெப்பமானி மூலம் காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதித்தல் முக்கியம் என்று அந்த கடிதத்தில் மாநகராட்சி ஆணையா் குறிப்பிட்டுள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews