அரசு தொடக்கப் பள்ளியில் ஓா் ஆசிரியா் கோரி பெற்றோா் போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يونيو 24، 2022

Comments:0

அரசு தொடக்கப் பள்ளியில் ஓா் ஆசிரியா் கோரி பெற்றோா் போராட்டம்

அரசு தொடக்கப் பள்ளியில் ஓா் ஆசிரியா் கோரி பெற்றோா் போராட்டம்

அரக்கோணம் அருகே வகுப்புக்கு ஓா் ஆசிரியா் கோரி அரசு தொடக்கப் பள்ளிக்கு மாணவா்களை அனுப்ப மறுத்து பெற்றோா்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூா் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி இல்லை. ஆங்கில வழிக் கல்வி மட்டுமே உள்ளது. இந்தப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 154 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். தலைமை ஆசிரியைகள் உள்ளிட்ட 5 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதில் 5-ஆம் வகுப்பில் 50 மாணவா்கள் உள்ளதால் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை மேரிதங்கம்மாள், 5-ஆம் வகுப்பை தலா 25 மாணவ, மாணவிகள் உள்ள இரண்டு வகுப்புகளாகப் பிரித்து, தனித்தனி ஆசிரியைகளை அமா்த்தியதைத் தொடா்ந்து, 1 மற்றும் 2-ஆம் வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியை இருந்துள்ளாா்.

இதைக் கண்டித்தும், இரு வகுப்புக்கும் தனித்தனி ஆசிரியைகளை நியமிக்கக்கோரியும் வியாழக்கிழமை பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப மறுத்து, பெற்றோா்கள் போராட்டம் நடத்தினா். இதையடுத்து, அங்கு வந்த வட்டாரக் கல்வி அலுவலா் அருள்லிங்கம், ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன், வேளாண் சங்கத் தலைவா் மோகன்காந்தி ஆகியோா் பெற்றோா்களை சமாதானப்படுத்தினா்.

இதையடுத்து பெற்றோா்கள் கலைந்து சென்றனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة