பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் சொத்துகள்
பள்ளிகல்வித்துறையில் குரூப் ஏ, குரூப் பி பிரிவு அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள திருவரங்குளம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் லியோ, தனக்கு வழங்கப்பட்ட இடமாறுதலை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட் கிளை உத்தரவு!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், பள்ளிகல்வித்துறையில் குரூப் ஏ, குரூப் பி பிரிவு அதிகாரிகளின் சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்க்க வேண்டும். அதில் மாறுதல் இருந்தால், சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதுடன், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், நிர்வாகிகளின் சொத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். பள்ளி கல்வித்துறையில் நடைபெறும் ஊழல் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க, போதுமான அளவில் போலீசாரை ஒதுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.
பள்ளிகல்வித்துறையில் குரூப் ஏ, குரூப் பி பிரிவு அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள திருவரங்குளம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் லியோ, தனக்கு வழங்கப்பட்ட இடமாறுதலை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட் கிளை உத்தரவு!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், பள்ளிகல்வித்துறையில் குரூப் ஏ, குரூப் பி பிரிவு அதிகாரிகளின் சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்க்க வேண்டும். அதில் மாறுதல் இருந்தால், சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதுடன், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், நிர்வாகிகளின் சொத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். பள்ளி கல்வித்துறையில் நடைபெறும் ஊழல் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க, போதுமான அளவில் போலீசாரை ஒதுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.