கல்லூரிகளில் பாலின அடிப்படையில் ‘ஷிப்ட்’ முறை படிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أبريل 23، 2022

Comments:0

கல்லூரிகளில் பாலின அடிப்படையில் ‘ஷிப்ட்’ முறை படிப்பு

கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாலின அடிப்படையில் ஷிப்ட் முறை படிப்பை அமல்படுத்த பரிசீலிக்கப்படுவதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது அவா் இந்தத் தகவலைத் தெரிவித்தாா். பொள்ளாச்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பது தொடா்பாக அதிமுக உறுப்பினா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பிரதான கேள்வியை எழுப்பினாா். இதைத் தொடா்ந்து உறுப்பினா்கள் சிலா் துணைக் கேள்விகளை கேட்டனா்.

இதற்கு அமைச்சா் க.பொன்முடி அளித்த பதில்: வேலைவாய்ப்புகள் அதிகமாக இருந்தால்தான் பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்பக் கல்லூரிகளில் சோ்க்கை அதிகம் இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1.10 லட்சம் சோ்க்கை இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப, ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களின் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 10 கல்லூரிகளைத் தொடங்குவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதேசமயம், இப்போதுள்ள கல்லூரிகளில் ஆண்கள் காலையிலும், பெண்கள் மாலையிலும் வந்து பயிலும் வகையிலான ஷிப்ட் முறையைக் கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் க.பொன்முடி.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة