மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أبريل 04، 2022

Comments:0

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம்

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் சுயஉதவிக்குழுக்கள், பஞ்சாயத்து கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் ஆகியவற்றுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. ஆகவே 2021-2022-ஆம் ஆண்டுக்கான விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை நகா்ப்புறப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளா்களிடமும், ஊரக பகுதிகளில் உள்ளவா்கள் வட்டார இயக்க மேலாளா்களிடமும் ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

எனவே மேற்காணும் விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகளை மாவட்ட திட்ட இயக்குநா் மற்றும் உதவி திட்ட அலுவலா்கள் நேரில் ஆய்வு செய்து, மாவட்ட திட்ட அலுவலகத்துக்கு 15.04.2022 தேதிக்குள் அனுப்பிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة