பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - முழு விவரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 11, 2022

Comments:0

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - முழு விவரம்

நடப்பாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 9,494 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் - அமைச்சர் அன்பில் மகேஷ்

அனைவருக்கும் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டம்

முதல் முறையாக கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

11, 12-ம் வகுப்பில் Computer Science பிரிவில் பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் ரூ.200 தனிக் கட்டணம் ரத்து

கட்டணத்துக்கான செலவை அரசே ஏற்கும்.

பள்ளிக்கு வர இயலாத 10,146 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி & இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை வீடுகளுக்கே சென்று கற்றல் சூழலை மேம்படுத்த ரூ.8.11 கோடி செலவில் பள்ளிக்கல்வித்துறை திட்டம்.

அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 -23ம் கல்வி ஆண்டிலிருந்து ரூபாய் 200 தனி கட்டணம் வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் மாணவர்களால் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும்

பள்ளிக்குச் செல்ல இயலாது மாணவர்களுக்கு இருப்பிடத்திலேயே கல்வி.

அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க 7 கோடியில் செம்மைப் பள்ளி

சதுரங்க போட்டி குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் சதுரங்க போட்டிகள் நடத்தப்படும்; போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும் விமர்சனங்கள் என்பது கடலில் எறியப்படும் கல்லை போன்றது. கல்தான் காணாமல் போகும்.

விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும் ; நாம் கடலாக இருப்போம் என்று சொல்லி எங்களுக்கு ஊக்கம் கொடுப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 30 கொடியில் ஆங்கில மொழி ஆய்வகங்கள்.

150 கொடியில் 7500 திறன் வகுப்பறைகள்

மணப்பாறை,செஞ்சி,தளி,திருமயம் அந்தியூர்,அரவக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி,ரெட்டியார்சத்திரம் வடலூர்,ஸ்ரீபெரும்புதூர்.

10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews