மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம், விலையில்லா சீருடைகள் - பட்ஜெட்டில் அறிவிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أبريل 09، 2022

Comments:0

மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம், விலையில்லா சீருடைகள் - பட்ஜெட்டில் அறிவிப்பு!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 6 ஆண்டுகளுக்கு பின் இன்று தாக்கல் செய்யப்பட்டது.பட்ஜெட்டை வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவா் சா்பஜெயாதாஸ் நரேந்திரன் தாக்கல் செய்தார். மேயர் பிரியாவின் ஒப்புதலை அடுத்து அவரின் முன்னிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கியமான திட்டங்களை மேயர் பிரியா அறிவித்தார். இதில் 2011 கணக்கின்படி, சென்னையில் 66.72 லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 88 லட்சமாக அதிகரித்துள்ளதால் பிரியா தெரிவித்தார்.



பட்ஜெட் அறிவிப்புகள்



*சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் இருக்கும் தெரு பெயர்கள், சாலை பெயர்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்படும். இதற்கு 8.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



*சென்னையில் வார்டு மேம்பாட்டு நிதி ரூபாய். 30 லட்சத்தில் இருந்து ரூபாய் 35 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 200 வார்டுகளுக்கு ரூபாய் 70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. *சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படும். அதேபோல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும்.

*தன்னார்வலர்கள் உதவியுடன் அனைத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்..

*மாணவிகளுக்கு நிர்பயா நிதி உதவியின் கீழ் சானிடரி நாப்கின்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*வீடற்றவர்கள் தங்குவதற்காக புதிதாக 3 காப்பகங்கள் உருவாக்க ரூ2.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மனநலம் பாதித்து சாலையில் திரிபவர்கள் தங்குவதற்கும் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

*சென்னை 2.0 திட்டத்தில் மாநகரை அழகுபடுத்த 26 இடங்களில் நீரூற்றுகள் அமைக்க ரூ.1.29 கோடி ஒதுக்கீடு

*சென்னை மாநகராட்சி குப்பைகளை சேமிக்க பேட்டரியில் இயங்கும் மேலும் 795 வாகனங்களை வாங்கப்படும். மறுசுழற்சி செய்ய முடியாத 2,600 மெட்ரிக் டன் குப்பைகளை பதப்படுத்தி, சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்புவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். 54,000 மெட்ரிக் டன் தேங்காய் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும். *சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு உடல்நலக் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். 16,500 நெகிழி குப்பை தொட்டிகள் ரூபாய் 2.90 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

*சென்னை மாநகராட்சியில் புதிதாக மூன்று டயாலிசிஸ் மையங்கள் தொடங்கப்படும்; படிப்படியாக அனைத்து மண்டலங்களில் டயாலிசிஸ் மையங்கள் ஏற்படுத்தப்படும்.

*சென்னை மாநகராட்சியில் e-office அறிமுகப்படுத்தப்படும். இதன் வாயிலாக வரும் காலங்களில் பொதுமக்களுக்கான சேவைகள் காலதாமதமின்றி விரைவாக செய்து முடிக்க இயலும்

*சென்னையில் குளங்களை மேம்படுத்தும் பணி, ரூ.143 கோடி மதிப்பீட்டில், இந்திய அரசின் அம்ருட் 2.0 திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.



1 மணலி ஏரி



2 சாத்தாங்காடு குளம்



3 சடையன் குப்பன் குளம்



4 மாதவரம் பெரிய ஏரி



5 அண்ணா நெடுஞ்சாலை குளம்.



*. மாற்றுத்திறனாளிகளுக்காக கடற்கரையில் நிரந்தர பாதை அமைக்கும் பணிக்கு ரூ.1.14 கோடி பெறப்பட்டுள்ளது; இந்த பணிகள் துவங்கப்பட்டு 2 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டும் *சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகர் முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

*சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும். அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில மொழி பேசும் பயிற்சி அளிக்கப்படும்.

*சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு ரூ.4.62 கோடி ஒதுக்கீடு.மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் ரூ. 80 லட்சம் செலவில் நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம்

*பொதுமக்கள் எளிமையான முறையில் சொத்து வரி செலுத்துவதற்காக QR குறியீடு இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும்.

*டிஜி லாக்கர் வழியாக வர்த்தக உரிமங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம். சென்னையில் உள்ள பூங்காங்கள் மற்றும் விளையாட்டு திடல்களை பராமரிக்கவும் மேம்படுத்தவும் ரூ.16.35 கோடி ஒதுக்கீடு.

*. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாலின சமத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் இணைய தள இணைப்பு ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும், இதற்கு 1.86 கோடியில் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة