இடமாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க ஆணையருக்கு கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مارس 09، 2022

Comments:0

இடமாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க ஆணையருக்கு கோரிக்கை

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

மதிப்புமிகு ஆணையர் அவர்களுக்கு,

வணக்கம். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் இதற்கு முன்னர் நடைபெற்ற பணி நிரவலின் காரணமாக பல்வேறு பள்ளிகளுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு தினமும் தங்கள் இல்லத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு சென்று பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் மீண்டும் தங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு பணிமாறுதல் பெற வாய்ப்பின்றி அல்லலுற்று வருகின்றனர். ஆகவே தற்போது நடைபெற்று வரும் பணி நிரவல் கலந்தாய்வில் அவ்வாசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க ஏற்கனவே தங்களிடம் எங்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு (W.P.No.: 3571/2022 மற்றும் W.P.No.4563/2022) அவ்வாசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க வேண்டுமென்ற அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து ஆணைபிறப்பிக்குமாறு தங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதையும் தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

எனவே பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் எங்களின் கோரிக்கையினை தாங்கள் கனிவுடன் பரிசீலனை செய்து தற்போது நடைபெறும் பணி நிரவல் கலந்தாய்வுக்கு முன் அவர்களுக்கு பணி மாறுதல் வழங்கிட ஆவன செய்யுமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டுகளில் பணி நிரவல் ரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க ஆவன செய்யுமாறு தங்களை கனிவுடன் வேண்டுகிறோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة