மாணவர்களுக்கு இலவசம் அரசு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مارس 09، 2022

Comments:0

மாணவர்களுக்கு இலவசம் அரசு அறிவிப்பு

மாணவர்களுக்கு இலவசம்: உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம்!!.

இதையும் படிக்க | மே - 2022 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்தல் (NR Downloading) - திருத்தங்கள் மேற்கொள்ளுதல் - தொடர்பாக -

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம். சென்னை, டி.எம்.எஸ் வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மாணவர்கள் இலவச ஆலோசனை பெறலாம்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே தற்போது போர் நடைபெற்று வருகிறது. சென்ற மாதம் தொடங்கிய இந்த போர் தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதையடுத்து உக்ரைனில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்கள் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்தனர் போர் தொடங்கியதை அடுத்து ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் இந்திய மாணவ மாணவிகள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

உக்ரைனில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த மாணவர்கள் போர் காரணமாக தாயகம் திரும்பியதால் அவர்கள் படிப்பை தொடர இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது தற்போது இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது அதுவும் இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة