மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مارس 23، 2022

Comments:0

மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு

கல்வி உதவித்தொகையுடன் தமிழ்ச்சுவடியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த படிப்புகளில் தற்போது மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதால், அதற்கான எழுத்து தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடக்க உள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்புவோர் இந்நிறுவனத்தின் வ்வ்வ்.உலகத்தமிழ்.இந்த என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரிலும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த படிப்புகளுக்கான சேர்க்கை கட்டணம் ரூ.3,100. கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வாம்ப எதும் கிடையாது. கல்வி உதவித்தொகையுடன் தமிழ்ச்சுவடியியல் மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளதால், அதற்கான எழுத்து தேர்வு ஏப்ரல் 13ம் தேதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது.

- தமிழாராய்ச்சி நிறுவனம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة