அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டதால் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - அமைச்சர் பேச்சு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مارس 30، 2022

Comments:0

அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டதால் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - அமைச்சர் பேச்சு

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், வட்டாரக்கல்வி அலுவலர் களுக்கான நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சிதுவக்க விழா, மதுரை நாகமலை- புதுக்கோட்டை அருகில் உள்ள பில்லர் மையத்தில் நடைபெற்றது.

இதில், 95 வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி, வணிகவரி மற் றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் துவக்கி வைத் தனர். கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை வகித் தார். முதன்மைக் கல்வி

அலுவலர் சுவாமிநாதன், தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி, மாநில கல் வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குநர் லதா, இணை இயக்குநர் கள் குமார், சாந்தி மற்றும் எம்எல்ஏக்கள் கோ.தள பதி, வெங்கடேசன், புதூர் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சர் பி.மூர்த்தி பேசு கையில், 'கடந்த 2 ஆண்டுக ளாக தனியார் பள்ளியை விட அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு அரசுப் பள்ளியின் தரம் உயர்த்தப் பட்டுள்ளதும்.

ஆசிரியர்க ளின் திறமையே காரண மாகும். மாணவர்களின் தரம் உயர வட்டாரக் கல்வி அலுவலர்கள் பாடு பட வேண்டும்' என்றார்.

அமைச்சர் அன்பில் பொய் யாமொழி பேசுகையில், 'ஆசிரியர் பெருமக்கள் உழ வர்களுக்குசமம். வட்டார கல்வி அலுவலர்கள்தான் அதன் நிர்வாகிகள். எங்கு குழந்தைகள் மகிழ்ச்சியு டன் இருக்கிறார்களோ, அங்கு தொடக்க கல்வி எங்கு தரமாக இருக்கும்.

இதற்கு ஆசிரியர் பெருமக் களே காரணம். இத்தகைய ஆசிரியர் பெருமக்களை கண்காணிக்கும் வட்டார கல்வி அலுவலர்களின் பொறுப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பெற்றோ ராக, நண்பராக, இருக்க வேண்டும்.

அவர்களை கண்காணிக்கும் வட்டார கல்வி அலுவலர்கள், அதை விட பொறுப்பு மிக்கவர்க ளாக இருக்க வேண்டும்' என கூறினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة