மார்ச் 7 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 01, 2022

Comments:0

மார்ச் 7 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு 07.03.2022 அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.மோகன்,இ.ஆ.ப.,அவர்கள் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் 07.03.2022 அன்று நடைபெறவுள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, 07.03.2022 அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இதையும் படிக்க | மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை

மேற்படி தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலகமும் மற்றும் சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும். மேலும், மாணவ/மாணவியர்களுக்கு 07.03.2022 அன்று தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும் எனவும், உள்ளூர் விடுமறை அறிவிக்கப்பட்டுள்ள 07.03.2022-க்குப் பதிலாக 19.03.2022 (சனிக்கிழமை) பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.மோகன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews