கேட் தேர்வுக்கு தடை:: சுப்ரீம் கோர்ட் விசாரணை
முதுநிலை பொறியியல் படிப்பிற்கான 'கேட்' தேர்வை தள்ளி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுஉள்ளது.
ஐ.ஐ.டி., - எம்.ஐ.டி., போன்ற உயர் கல்வி மையங்களில் முதுநிலை பொறியியல் படிப்பில் சேர 'கேட்' எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத் துறை நிறுவனங்களில் நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதனால் ஏராளமான பொறியியல் மாணவர்கள் கேட் தேர்வில் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்தாண்டு கேட் தேர்வு வரும், 5ம் தேதி நடக்க உள்ளது. நாடு முழுதும், 200 மையங்களில், ஒன்பது லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுத உள்ளனர். இந்நிலையில் நேற்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன், பல்லவ் மோங்கியா என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் கேட் தேர்வில், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான அறிக்கை வெளியிடப்படவில்லை. அதனால் கேட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு ஏற்கனவே அனுமதி சீட்டு வழங்கப்பட்டு விட்டது. அத்துடன் தேர்வுக்கு சில தினங்களே உள்ளதால், மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மனுவின் முக்கியத்துவம் கருதி, உடனடியாக விசாரணை பட்டியலில் சேர்க்க அமர்வு உத்தரவிட்டது
முதுநிலை பொறியியல் படிப்பிற்கான 'கேட்' தேர்வை தள்ளி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுஉள்ளது.
ஐ.ஐ.டி., - எம்.ஐ.டி., போன்ற உயர் கல்வி மையங்களில் முதுநிலை பொறியியல் படிப்பில் சேர 'கேட்' எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத் துறை நிறுவனங்களில் நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதனால் ஏராளமான பொறியியல் மாணவர்கள் கேட் தேர்வில் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்தாண்டு கேட் தேர்வு வரும், 5ம் தேதி நடக்க உள்ளது. நாடு முழுதும், 200 மையங்களில், ஒன்பது லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுத உள்ளனர். இந்நிலையில் நேற்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன், பல்லவ் மோங்கியா என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் கேட் தேர்வில், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான அறிக்கை வெளியிடப்படவில்லை. அதனால் கேட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு ஏற்கனவே அனுமதி சீட்டு வழங்கப்பட்டு விட்டது. அத்துடன் தேர்வுக்கு சில தினங்களே உள்ளதால், மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மனுவின் முக்கியத்துவம் கருதி, உடனடியாக விசாரணை பட்டியலில் சேர்க்க அமர்வு உத்தரவிட்டது
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.