பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்திற்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، فبراير 28، 2022

Comments:0

பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்திற்கு

பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்திற்கு..

தாங்கள் பணியேற்பிடைக் காலத்தினை அனுபவிக்கவில்லையெனில் (இரு பள்ளிகளுக்கிடையே குறைந்தது 8 கிலோமீட்டர் தொலைவு இருக்க வேண்டும்) வருகின்ற மார்ச் மாத குறைதீர்நாள் முகாமில் தாங்கள் அனுபவிக்காத பணியேற்பிடைக் காலத்தினை தங்களுடைய ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்த்திட விண்ணப்பம் கொடுத்திடுங்கள்...

இதையும் படிக்க | பரோடா வங்கியில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.03.2022

பதவி உயர்வு பெற்றவர்கள் கவனத்திற்கு...

தங்கள் பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்ய விண்ணப்பம் அளிக்கும் பொழுது ஜனவரி-22 ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் மட்டும் 01.03.2022 அன்று ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளவும். ஏப்ரல், ஜூலை & அக்டோபர் ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் வழக்கமான இவ்வாண்டிற்கான ஆண்டு ஊதிய உயர்வு பெற்றபின் பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பக் கடிதத்தினையும், மார்ச் மாத குறைதீர் நாள் கூட்டத்தில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அது தங்களுக்கு நன்மையாக அமையும்...

தகவல் பகிர்வு:
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
கரூர் மாவட்டம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة