இனி தமிழில் தேர்வு நடத்தப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 11, 2022

Comments:0

இனி தமிழில் தேர்வு நடத்தப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்

இனி வரக்கூடிய காலங்களில் தமிழில் தேர்வு நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் கா. பாலச்சந்திரன்.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 79 மையங்களில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை காலை முதல் நடத்தி வருகிறது. தஞ்சாவூர் மகர்நோன்புசாவடியிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் இத்தேர்வைப் பார்வையிட்ட ஆணையத் தலைவர் கா. பாலச்சந்திரன் செய்தியாளரிடம் தெரிவித்தது: இனி வரக்கூடிய காலங்களில் தேர்வுகள் தமிழ் வழியில் நடத்தப்படும். தற்போது நடைபெறும் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிட்டபோது, தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெளியாகாததால் வழக்கம்போல நடைபெறுகிறது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்வில் இருவிதமான பணிகள் இருக்கும். குரூப்-4 தேர்வில் கொள்குறி வகை (அப்ஜக்டிவ் டைப்) தமிழில் இருக்கும்.

மற்ற குரூப் 1, 2, 2ஏ ஆகிய தேர்வுகளில் விரிந்துரைக்கும் வகையிலான (டெஸ்கிரிப்டிவ்) வினாத்தாள் இருக்கும். இதில் 40 மதிப்பெண்களுக்கும் அதிகமாக எடுத்தால் மட்டுமே மற்ற கேள்விகளுக்கான பதில்கள் திருத்தப்படும்.

குரூப்-4 தேர்விலும் 40-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றால்தான் தொடர்ந்து அவர்கள் எழுதிய அனைத்து விடைகளும் மதிப்பீடு செய்யப்படும். தமிழில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களைத் தகுதி மதிப்பெண்களாக மட்டுமல்லாமல், எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறார்களோ அதையும் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பைத் தேர்வாணையம் செய்கிறது என்றார் பாலச்சந்திரன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews