கற்றல் அடைவுகள், வலுவூட்டும் பயிற்சி வகுப்புகள் - காணொளி காட்சி மூலம் நடத்த ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يناير 18، 2022

Comments:0

கற்றல் அடைவுகள், வலுவூட்டும் பயிற்சி வகுப்புகள் - காணொளி காட்சி மூலம் நடத்த ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் பள்ளிக் கல்வித்துறை கடந்த சில மாதங்க ளாக பள்ளி கட்டமைப்பு, எமிஸ், பராமரிப்பு பதிவேடுகள் உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் ஒரு பள்ளியில் உள்ள ஆசிரியர்களில் 50 சதவீதம் என இரண்டு கட்டங்களாக பிரித்து, பயிற்சிகளை அந்தந்த ஒன்றியங்க ளில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வ கங்களில் கடந்த ஜன வரி 10ல் ஆரம் பித்து பிப் 25ல் நடத்த திட்டமிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கி உள்ளது.

கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் தமிழக அரசு 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாண வர்களுக்கு நேரடி வகுப்புகள் இல்லை என கடந்த டிச.31ல் அறி வித்த நிலையில் தற்போது 9 முதல் 12 வகுப்புகளுக்கு வரும் ஜனவரி 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை யினை அறிவித்துள்ளது. ஆனாலும், திட்டமிட்டபடி ஜனவரி 19 முதல் ஆசிரியர்கள் பயிற்சிக்கு வர வேண் டும் என அரசு அறிவித்துள்ள அறி விப்பால் ஆசிரியர்கள் வேதனையில் உள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு தொடக் கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச் செயலாளரு மான ரெங்கராஜன் கூறுகையில், ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்வ தில் எவ்வித சிக்கலும் இல்லை. கொரோனா மூன்றாம் அலை வேகமெடுத்து ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் ஆசிரி யர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டும் பயிற்சியை காணொளி காட்சி வழியாக நடத்த அரசுக்கு எங்கள் இயக்கத்தின் சார்பில் வேண் டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனாலும், திட்டமிட்டபடி பயிற்சி வகுப்புகள் வரும் 19ல் துவங் கும் என அரசு அறிவித்துள்ளது ஆசிரியர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர் களின் நலனை மனதில் கொண்டு தமிழக அரசு கற்றல் அடைவுகள் வலுவூட்டும் பயிற்சி வகுப்புகளை நேரடி வகுப்புகளாக நடத்தாமல் காணொளிக் காட்சி வகுப்புகள் மூலம் நடத்தி ஆசிரியர்களின் அச் சத்தையும், மன உளைச்சலையும் தமிழக அரசு போக்க வேண்டும் என்றார்.

நாளை (19ம் தேதி) பயிற்சிகள் துவங்கவுள்ள நிலையில் அரசு இதற் கொரு நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة