முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டுக்கான படிவம்-12 ஐ வழங்க வேண்டும்'என, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து மாநில செய்தி தொடர்பு செயலாளர் முருகேசன் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும், அரசு அலுவலர்களும் ஈடுபட உள்ளனர். அதற்காக மூன்று கட்டமாக தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இன்று (ஜன.31) நடக்க உள்ள முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டுப்பதிவுக்கான படிவம்-12 ஐ வழங்க வேண்டும்.மேலும் தேர்தல் பணி நியமன கடிதம், வாக்காளர் அட்டை நகலை படிவத்துடன் இணைத்து தேர்தல் அலுவலரிடம் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டாவது பயிற்சியின் போது தபால் ஓட்டை பதிவு செய்யவும், கையெழுத்திடவும் கெஜடெட் அலுவலரை நியமித்து ஓட்டளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பயிற்சிக்கு வருவோருக்கு தண்ணீர், உணவு, போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், என்றார்.
இது குறித்து மாநில செய்தி தொடர்பு செயலாளர் முருகேசன் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும், அரசு அலுவலர்களும் ஈடுபட உள்ளனர். அதற்காக மூன்று கட்டமாக தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இன்று (ஜன.31) நடக்க உள்ள முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டுப்பதிவுக்கான படிவம்-12 ஐ வழங்க வேண்டும்.மேலும் தேர்தல் பணி நியமன கடிதம், வாக்காளர் அட்டை நகலை படிவத்துடன் இணைத்து தேர்தல் அலுவலரிடம் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டாவது பயிற்சியின் போது தபால் ஓட்டை பதிவு செய்யவும், கையெழுத்திடவும் கெஜடெட் அலுவலரை நியமித்து ஓட்டளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பயிற்சிக்கு வருவோருக்கு தண்ணீர், உணவு, போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், என்றார்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.