பொங்கல் சிறப்பு தொகுப்பு! - முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய தொகுப்புக்கு உரிய தொகையை விடுவிக்க உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 14, 2021

Comments:0

பொங்கல் சிறப்பு தொகுப்பு! - முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய தொகுப்புக்கு உரிய தொகையை விடுவிக்க உத்தரவு.

பொங்கல் பரிசு தொகுப்பு 2022 - அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதல் - அரசாணை வழங்கப்பட்டது - முந்திரி-50கி, திராட்சை-50கி மற்றும் ஏலக்காய்-10கி அடங்கிய தொகுப்பு ஒன்றுக்கு உரிய தொகையினை மண்டலங்களுக்கு விடுவிக்க கோருதல் - தொடர்பாக.

பார்வை:

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடத்தப்பெற்ற பொதுவிநியோக திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நாள் 13.12.2021

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் இன்று 13.12.2021 நடைபெற்ற பொதுவிநியோக திட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 2022 ஆண்டுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ள முந்திரி-50கி, திராட்சை-50கி மற்றும் ஏலக்காய்-10கி அடங்கிய தொகுப்பு ஒன்றுக்கு அதிகபட்ச விலை ரூ62/ செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews