ஏற்றுமதி, இறக்குமதி குறித்த வரும் 15-ம் தேதி முதல் இணையவழி கருத்தரங்கம் - தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 12, 2021

Comments:0

ஏற்றுமதி, இறக்குமதி குறித்த வரும் 15-ம் தேதி முதல் இணையவழி கருத்தரங்கம் - தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு

தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்கநிறுவனம், ஏற்றுமதி, இறக்குமதிவழிமுறைகள், சட்டதிட்டங்கள் குறித்த 3 நாள் இணையவழிக் கருத்தரங்கை வரும் 15-ம் தேதிமுதல் 17-ம் தேதி வரை நடத்துகிறது.

தினமும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் இக்கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இதில், ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புக்கள், ஏற்றுமதி-இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படும். ஏற்றுமதி-இறக்குமதி சார்ந்த தொழில் தொடங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும், 18 வயது நிரம்பிய, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இதில் சேரலாம்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.edittn.in என்றஇணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், ஈக்காட்டுத்தாங்கல் பார்த்தசாரதி கோயில் தெருவில் உள்ள, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தை நேரிலோ அல்லது 8668102600, 9444557654, 044-22252081, 044-22252082 என்ற எண்களிலோ தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews