அரசு ஊழியர், ஆசிரியர்களின் போராட்ட காலத்தை முறைப்படுத்தாமல் இழுத்தடிப்பு - அரசாணை வெளியிட்டும் மெத்தனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، نوفمبر 18، 2021

Comments:0

அரசு ஊழியர், ஆசிரியர்களின் போராட்ட காலத்தை முறைப்படுத்தாமல் இழுத்தடிப்பு - அரசாணை வெளியிட்டும் மெத்தனம்

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்த இழுத்த டிப்பு செய்யப்பட்டுவருவ தாக, அரசு ஊழியர்கள் மற் றும் ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்களுக்கான புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என் பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி, கடந்த அதிமுக ஆட் சிக் காலத்தில் ஜாக்டோ- ஜியோ சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்டவர்கள் மீது கைது, சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், கடும் அதிருப்தியடைந்தனர்.

தற்போது திமுக ஆட்சி அமைந்தவுடன் இவை ரத்து செய்யப்பட்டதுடன், போராட்ட காலங்களாக 10.2.2016 முதல் 19.2.2016 வரையிலும், 22.8.2017ம் தேதியும், 7.9.2017 முதல் 15.9.2017 வரையிலும் மற் றும் 22.1.2019 முதல் 30.12019 வரையிலும் உள்ள நாட்கள் பணிக்காலமாக முறைப்ப டுத்தப்படும் என அர சாணை வெளியிடப்பட் டது. தமிழகத்தில் உள்ள பலமாவட்டங்களில் இதற் கான தொடர் நடவடிக்கை மேற்கொண்டு, ஊதியம் வழங்குதல், பணிப்பதி வழங்குதல், பணிப்பதி வேட்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. ஆனால், சேலம் மாவட்டத்தில் இதுவரை ஊதியம் பெற்று வழங்கப் படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட சம்பளம் பெற்று வழங்கும் அலுவ லர்கள் மற்றும் சார்நிலை கருவூல அதிகாரிகளிடம் கேட்கும் போது, உரிய உத் தரவு வராததால், சம்பள பில்லை பெற முடியாது என தட்டிக்கழிக்கின்றனர்.

தலைமை செயலாளர் அரசாணை வெளியிட்டு, அதிகாரிகள் உத்தரவிட்ட பின்னரும். வேண்டு மென்றே இழுத்தடிப்பு செய்கின்றனர். இதனால் முதல்வர் உத்தரவிட்டும். சேலம் மாவட்டத்தில் உள்ள சுமார் 15 ஆயிரத்திற் கும்மேற்பட்ட அரசு ஊழி யர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கருவூலத்துறை அதிகாரிகள் கூறுகையில், “போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த, தமிழக அர சின் உத்தரவே போதுமா னது. தனியாக உத்தரவு எது வும் கேட்கவில்லை. எனவே, அதற்கான பில்லை வழங் கினால், ஊதியம் பெற்று வழங்கப்படும்," என்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة