பொதுநலன் கருதி: மழைக்காலத்தில் பொதுமக்கள் செய்யக்கூடாதவை? செய்யக்கூடியவை? குறித்து ஓர் அலசல்..!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 09, 2021

Comments:0

பொதுநலன் கருதி: மழைக்காலத்தில் பொதுமக்கள் செய்யக்கூடாதவை? செய்யக்கூடியவை? குறித்து ஓர் அலசல்..!!

தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மழைக்காலத்தில் பொதுமக்கள் செய்யக்கூடியவை? செய்யக்கூடாதவை? என்ன என்பது குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மழைக்காலத்தில் செய்யக்கூடாதவை?

* தனியாக உள்ள மரங்கள், குடிசைகளில் தஞ்சம் அடையக்கூடாது.

* சேதமடைந்த கட்டடங்கள், கூடாரங்களுக்கு அடியில் நிற்கக்கூடாது.

* நீர்நிலைகள், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

* குழந்தைகள், செல்லப்பிராணிகளை தண்ணீருக்கு அருகில் விடக்கூடாது.

* இடி, மின்னலின் போது மின் சாதனங்கள், செல்போன், தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம்.

* மழைநீர் தேங்கியுள்ள தெருக்களில் உள்ள மின் மாற்றிகளின் வேலி அருகே செல்ல வேண்டாம்.

* திறந்திருக்கும் ஜன்னல்கள், கதவுகளுக்கு அருகில் நிற்பதை தவிர்க்கலாம்.

* குளியலறைகள், கழிப்பறைகள் மற்றும் பிற ஈரமான இடங்களில் நேரடியாக கைகளால் சுவிட்சுகளை தொடக்கூடாது.

* ஈரமான துணிகளை உலர்த்த மின்கம்பங்களில் கயிறு கட்டவோ, மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டவோ கூடாது.

* அறுந்து கிடக்கும் மின்வயர்களுக்கு அருகே செல்லக்கூடாது; தேவையற்ற வதந்திகளை பரப்பக்கூடாது. மழைக்காலத்தில் செய்யக்கூடியவை?

* மழை காலத்தின் போது குடை, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, டார்ச் லைட் மற்றும் பேட்டரிகளை தயாராக வைத்திருப்பது அவசியம்.

* பலத்த மழை பெய்யும் பொழுது மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பினை துண்டித்து வைக்க வேண்டும்.

* மின்கசிவு அல்லது தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

* முதலுதவி பெட்டியை தயாராக வைத்திருப்பது அவசியம்.

* கொதிக்க வைத்த நீரை அருந்த வேண்டும்.

* விலை உயர்ந்த பொருட்கள், ஆவணங்கள், உணவு பொருட்களை நீர் புகாத பைகளில் பாதுகாத்து வைக்க வேண்டும்.

* அடையாள அட்டை, சான்றிதழ்களை பத்திரப்படுத்தவும்.

* அத்தியாவசிய உணவுப்பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்வது அவசியம்.

* குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்.

* செல்போன்களை முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* புயல், சூறாவளியின் போது கதவுகள், ஜன்னனல்களை மூடி வைக்க வேண்டும்.

* அவசர உதவி எண்களை அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* மழை, வெள்ள காலங்களில் அரசு வெளியிடும் முன்னெச்சரிக்கையை முறையாக பின்பற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews