பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 30 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 27, 2021

Comments:0

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 30

கோவிட் பெருந்தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகள், அனாதைகள், ஆயுதப்படை மற்றும் மத்திய துணை ராணுவ படைகளை சேர்ந்த வீரர்களின் வாரிசுகள் ஆகியோர்களது கல்விக்கு உதவும் வகையில் ஏ.ஐ.சி.டி.இ., இந்த உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்துகிறது.

தகுதிகள்:* ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் படிப்புகளை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.* முழுநேர கல்வியாக பட்டப்படிப்பு அல்லது டிப்ளமா படிக்கும் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டுக்குள் தற்போது படித்துக்கொண்டிருக்க வேண்டும்.* அனைத்து ஆதரங்கள் வாயிலாகவும் ஆண்டு குடும்ப வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை விபரம்:பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டருக்கு ரூ. 50 ஆயிரம் வீதம் அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். டிப்ளமா படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு கல்விக்கட்டணம், புத்தகங்கள், இதர கல்வி உபகரணங்கள் வாங்க உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகை எண்ணிக்கை: டிப்ளமா மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் தலா ஆயிரம் மாணவர்கள் வீதம் மொத்தம் 2 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 30

விபரங்களுக்கு: https://scholarships.gov.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews