பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு செ.வெ.எண்.308 நாள். 12:11.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 13, 2021

Comments:0

பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு செ.வெ.எண்.308 நாள். 12:11.2021

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, அத்தியாவசிய பொருட்களை வழங்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது!

பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு

செ.வெ.எண்.308

நாள். 12:11.2021

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிகப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்க முன்வரவேண்டும்

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு மூன்று வேளையும் அனைத்து மண்டலங்களிலும் தயாரித்து தரமான மற்றும் சுவையான உணவுகளை அந்தந்த இடத்திற்கே நேரில் சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், பாய், தலையணை, போர்வை, சோப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்க முன்வந்தால், மண்டலம்-8, சென்னை-102, ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம் கார்டன் காலணி, நியூ ஆவடி சாலை அருகில் உள்ள ஜெஜெ. உள் விளையாட்டு அரங்கத்திற்கு நேரில் கொண்டு வந்து வழங்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அழுகும் பொருட்கள், சமைக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் பழைய பொருட்கள் போன்றவைகளை வழங்குவதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரண பணிகளுக்கு உடன் இணைந்து பணி செய்ய விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் https://formsgle/NkEVTivsH8hKTv009 மின்இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. என்ற

மேலும், விவரங்களுக்கு. 94450-25821 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews