அஞ்சல் துறையில் நேரடி முகவர் பணி - நவ., 18ம் தேதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، نوفمبر 07، 2021

Comments:0

அஞ்சல் துறையில் நேரடி முகவர் பணி - நவ., 18ம் தேதி

அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணியிடங்களுக்கு சேர விரும்புவோர் விண்ணப்பிக்க, அஞ் சல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

கோவை அஞ்சல் கோட்டத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீட்டுக்கு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரிகளை தேர்வு செய்வதற் கான நேர்முகத்தேர்வு, நவ.,18ல் நடக்கிறது. கூட்ஸ்ஷெட் ரோடு, கோவை தலைமை அஞ் சல் நிலையம், கோட்ட முதுநிலை கண்காணிப் பாளர் அலுவலகத்தில் தேர்வு நடக்கிறது.

இத்தேர்வில், 18 முதல், 50 வய துக்கு உட்பட்ட, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், 65 வயதுக்கு உட்பட்ட மத்திய, மாநில அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பணியா ளர்கள், அதிகாரிகளும் கலந்துகொள்ளலாம். தகுதியானவர்கள், விண்ணப்பம் மற்றும் தேவையான சான்றி தழ்களுடன், நவ., 18ம் தேதி, காலை, 10:00 மணிக்கு தலைமை அஞ்சல் நிலையம் வர வேண்டும்.

விண்ணப்பங்களை, அனைத்து அஞ்சல் நிலையங்களில் இலவ சமாகவும், docoimbatore.tn@indiapost.gov.in என்ற இ -மெயில் முகவரிக்கு கோரிக்கை அனுப்பு வதன் மூலமும் பெற் றுக்கொள்ளலாம். விவரங்களுக்கு, 0422 -2558 541 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, கோவை கோட்ட முது நிலை கண்காணிப்பா ளர் கோபாலன் தெரி வித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة