பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: பிழைகள் இருந்தால் தெரிவிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 07, 2021

Comments:0

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: பிழைகள் இருந்தால் தெரிவிக்கலாம்

"பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தங்கள் ஏதேனும் பள்ளிகளில் இருந்து பெறப்பட்டால், மாவட்ட உதவி இயக்குநா்கள் அவற்றைத் தொகுத்து ஆதாரங்களுடன் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்கள் பிறந்த தேதி, பெயரில் திருத்தங்கள் இருப்பின் மாற்றுச்சான்றிதழின் சான்றொப்பமிட்ட நகலை இணைத்து அனுப்ப வேண்டும். பெற்றோா் பெயரில் பிழை இருப்பின் தலைமை ஆசிரியா் மூலம் ஆளறிச்சான்றிதழை அனுப்ப வேண்டும். இந்த விவகாரம் மீது உரிய கவனம் செலுத்தி பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அரசு தோ்வுத்துறை இணை இயக்குநா் (பணியாளா்) க.செல்வக்குமாா், அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews