பள்ளிகளில் நாளை முதல் கலா உத்சவ் போட்டிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أكتوبر 10، 2021

Comments:0

பள்ளிகளில் நாளை முதல் கலா உத்சவ் போட்டிகள்

மதுரை முதன்மைக்கல்வி அலுவ லர் சுவாமிநாதன் உத்தர விட்டுள்ளார்.

அவரது சுற்றறிக்கை யில், “ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக அனைத்து வகை பள்ளிக ளில் இடைநிலை மற்றும் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவர்களது படைப்பாற் றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரி டம் உயிர்ப்புடன் வைத்தி ருக்கவும், வாய்ப்பாட்டிசை, கருவியிசை, நடனம் மற் றும் காண்கலை எனும் 4 பெருந்தலைப்புகளில் காலஉத்சவ் போட்டிகள் 2015- 2016ம் கல்வியாண்டுமுதல் நடத்தப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து இந்த கல்வியாண்டில் இப் போட்டிகளை நடத்திட அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் 9 பிரிவுக ளில் மாணவ, மாணவிக்கு தனித்தனியே நடைபெற உள்ளது. பள்ளி, மாவட்ட, மாநில அளவில் கலா உத் சவ் போட்டிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்வி மாவட்ட அளவில் நாளை முதல் 22ம் தேதி வரையிலும், கல்வி மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும்மாண வர்களின் விவரம்மாவட்ட திட்ட அலுவலகத்தில் வரும் 25ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவி லான போட்டிகள் வரும் 28ம் தேதியிலும், மாநில அளவிலான போட்டி கள் நவ.16ம் தேதி முதல் நவ.18ம் தேதி வரையிலும் நடக்கும். மேலும் போட் டிகளில் தேர்ந்தெடுக்கப்ப டும் மாணவ,மாணவியர் பெயர் பட்டியலை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட திட்ட அலுவல கத்திற்கு வழங்கிட வேண் டும் என்று தெரிவித்துள் ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة