கற்றல் அடைவுத் தேர்வு: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أكتوبر 16، 2021

Comments:0

கற்றல் அடைவுத் தேர்வு: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

கற்றல் அடை வுத் தேர்வில் பங்கேற்கும் வகை யில் 3, 5, 8, 10 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக் குமாறு தலைமை ஆசிரியர்க ளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி இயக்குந ரகம் சார்பில், மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

கரோனா பரவல் காரணமாக பள்ளிமாணவர்களிடம்ஏற்பட்ட கற்றல் இழப்பீட்டை கண்டறிவ தற்குநாடு முழுவதும் 'நாஸ்' எனப் படும் கற்றல் அடைவுத் தேர்வு நடத்த மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.அதன் அடிப்படையில் 3, 5, 8, 10-ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவில் கற்றல் அடைவுத் தேர்வு நவம்பர் 12-ஆம் தேதி நடைபெ றவுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவ னம் (எஸ்சிஇஆர்டி) மூலம் இந்த தேர்வானது நடத்தப்படும்.

இதையடுத்து 3, 5, 8, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர் வில் பங்கேற்க ஏதுவாக பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இது குறித்து அனைத்து பள்ளிக ளின் தலைமையாசிரியர்களுக் கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة