உலக சாதனை நிகழ்ச்சி-600 மாணவ, மாணவிகள் பங்கேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 26, 2021

Comments:0

உலக சாதனை நிகழ்ச்சி-600 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

விராலிமலை : இலுப்பூர் அருகேயுள்ள மேலபட்டியில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாகவும், சிலம்ப கலையை மீட்டெடுக்கும் விதமாகவும் பள்ளி மாணவர்களின் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.பஞ்சபூதா சர்வதேச தற்காப்புக் கலை சம்மேளனம் சார்பில் பஞ்சபூதா உலக சாதனை புத்தகத்தின் நிகழ்வாக நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் தமிழர்களின் பாரம்பரிய போர்கலையான சிலம்பத்தில் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றியவாறு இரண்டு கிலோ மீட்டர் தூரம், ஒரு மணி நேரம் நின்ற நிலையில் இடைவிடாது சிலம்பத்தை கைகளால் சுழற்றியும் மாணவர்கள் சாதனை படைத்தனர். 638 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த உலக சாதனை நிகழ்ச்சியை பஞ்சபூதா நிர்வாக இயக்குனரும், சிலம்பக்கலை வல்லுனருமான சதீஷ்குமார் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தினார்.

சிலம்பக் கலை, மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆர்டிஓ தண்டாயுதபாணி, தாசில்தார் முத்துக்கருப்பன், ரவிச்சந்திரன் (தனி), மருத்துவர் புனிதாகுமார், பள்ளி துணை ஆய்வாளர் வேலுச்சாமி, புதுக்கோட்டை மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் சத்யமூர்த்தி, ஆர்ஐ பிச்சை உள்ளிட்டோர் பங்கேற்றனர். 13. நாற்று நடுவதற்குமுன் உயிர் உர நேர்த்தி அவசியம்-வேளாண் உதவி இயக்குனர் தகவல்

பொன்னமராவதி : பொன்னமராவதி பகுதி விவசாயிகள் நெல் நாற்று நடுவதற்கு முன் உயிர் உர நேர்த்தி செய்யவேண்டுமென்று பொன்னமராவதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி கூறினார்.நெல் நாற்றுக்களை பறித்து நாற்றங்காலின் ஓரத்தில் அணைகட்டி ஒரு ஏக்கர் நிலம் நடுவதற்குரிய நாற்றங்காலுக்கு 200மி அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா திரவத்தை ஊற்றி அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு நட வேண்டும்.

பாக்டீரியாக்கள் காற்றிலுள்ள நைட்ரஜனை தழைச்சத்தாக மண்ணில் நிலை நிறுத்தும். வளர்ச்சி ஊக்கிகளை வெளியேறும் இதனால் பயிர் வீரியமாக வளரும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். மகசூல் அதிகரிக்கும். உரச் செலவை குறைக்கலாம். விவசாயிகள் பொன்னமராவதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இதனை பெற்று பயன்படும்படி கேட்டுக்கொண்டார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews