ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டுதல் சார்பு - பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் முன்னேற்றச்சங்கம் - Date : 17.09.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، سبتمبر 17، 2021

Comments:0

ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டுதல் சார்பு - பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் முன்னேற்றச்சங்கம் - Date : 17.09.2021

தமிழக பள்ளிகளில் நீண்ட வருடங்களாக பலஆயிரம் ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களில் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தனது குடும்பம் குழந்தைகள், பெற்றோர்களை கவணிக்க முடியாமல் உளவியல் ரீதியாக பல்வேறு சிரமங்களிலிருந்து பணிபுரிந்து வருகின்றனர். கடந்த காலங்களிலும் முறையாக கலந்தாய்வு நடைவறவில்லை.


பணம்படைத்தவர்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி வருடம் முழுவதும் நிர்வாக மாறுதல் பெற்றார்கள். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கும் கலந்தாய்வு நடைபெறவில்லை. அணைத்துப்பணியிடங்களும் நிர்வாக அடிப்படையில் மாறுதல் செய்யப்பட்டன. நீதிமன்றம் சென்று ஆனைகள் பெற்றதும் கிடப்பில் உள்ளது.


இதனாலயே வெளிமாவட்ட ஆசிரியர்கள் தனது மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் துயரத்தில் இருந்து வருகின்றனர். எனவே மாண்புமிகு தமிழக கல்வியமைச்சர் அவர்கள், மதிப்புரு பள்ளிக் கல்வி செயலர் அவர்கள் விடியலை நோக்கிய ஆசிரியர்களுக்கு நல்ல நிலைப்பாட்டுடன் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டி பணந்து வேண்டுகிறோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة