உள்ளாட்சி தேர்தலுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இன்று பயிற்சி - பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர்கள் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 24, 2021

Comments:0

உள்ளாட்சி தேர்தலுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இன்று பயிற்சி - பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர்கள் உத்தரவு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு வரும் 24ம் தேதி பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. மேலும் 3 கட்டங்கள் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத் தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர் தல் காஞ்சிபுரம், செங்கல் பட்டு. வேலூர். ராணிப் பேட்டை, திருப்பத்தூர். விழுப்புரம், கள்ளக்கு றிச்சி. திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட் டங்களில் வரும் 6மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்ட மாக தேர்தல் நடக்க உள் ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்க லும் கடந்த 15ம் தேதி தொடங்கி நேற்றுடன் மனு பரிசீலனை முடிந் துள்ளது. நாளை மனுக் கள் பெற கடைசி நாளா கும். தேர்தல் பணியாற்ற உள்ள தேர்தல் அலுவலர் களுக்கு பணி ஒதுக்கீடு கணினி மூலம் அந்தந்த கலெக்டர்கள் தலைமை யில் செய்யப்பட்டு உள் ளது.


இதற்கிடையில் தேர் தல் பணியில் ஈடுபட உள்ள தேர்தல் அலுவ லர்களுக்கு 3 கட்டங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த மாநில தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று வேலூர்மாவட்டத்தில் முதல் கட்டமாக 7 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசி யர்களுக்கு பயிற்சி நடக்க உள்ளது. பயிற்சியில் ஆசி ரியர்கள் கலந்து கொள்ள உள்ள தால் இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடு முறை அளித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட் டுள்ளார். இதுகுறித்து ஊரக உள் ளாட்சித்துறை அதிகாரி கள் கூறியதாவது:


வேலூர் மாவட்டத் தில் மொத்தம் ஊரக உள்ளாட்சி தேர்தலாக 1,331 வாக்குச்சாவடி மையங் கள் அமைக் கப்பட்டுள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு தலைமை வாக்குச்சாவடி அலுவலர் தலைமையில் 7 அலுவலர்கள் பணிய மர்த்தப்படுவார்கள். ஊராட்சி வார்டு உறுப் பினர். ஊராட்சிமன்ற தலைவர், ஒன்றிய கவுன் சிலர், மாவட்ட கவுன்சி லர் ஆகிய 4 பதவிகளுக்கு வாக்குச்சீட்டுகள் தனித்த னியாக வழங்கப்படும்.


அதாவது ஒரு வாக்கா ளர் 4 வாக்குகள் பதிவு செய்வார். இதனால் அரசு ழியர்கள். ஊ ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு கணினி முறை யில் குலுக்கல் நடத்தி வாக்குச்சாவடிகள் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.இவர்களுக்கு 3 கட்டங்க ளாக பயிற்சி வகுப்பு நடக் கிறது. இன்று முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. இதில் 11 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக 7 ஒன்றியங்களில் பயிற்சி மையங்கள் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் ஊரீசுக்கல்லூரி, காட் பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கணியம் பாடி அரசு மேல்நிலைப்பள்ளி குடியாத்தம் திருவள் ளுவர் மேல்நிலைப் பள்ளி, கே.வி.குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிக் பள்ளி, பேர்ணாம்பட்டு இஸ்லாமிய மேல்நிலை பள்ளி, அணைக்கட்டு ஸ்ரீ விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடக்கிறது. 2வது கட்ட தேர்தல் பயிற்சி 29ம் தேதியும், 3வது கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு 5ம் தேதி நடக்க உள்ளது. 2வது கட்டமாக நடக்கும் தேர்தலுக்கு வரும் 8ம் தேதி பயிற்சி நடக்கிறது. பயிற்சிகள் அந்தந்த ஒன்றியங்களில் நடத்த திட்டமிடப்பட உள்ளது. இதில் கட்டா யம் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவு றுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews