பள்ளிகள் திறப்பு - அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி மாணவர்கள் - செய்யக்கூடியவை& செய்யக்கூடாதவை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 01, 2021

Comments:0

பள்ளிகள் திறப்பு - அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி மாணவர்கள் - செய்யக்கூடியவை& செய்யக்கூடாதவை

செய்யக்கூடியவை

* பள்ளி வருகைக்கான ஒப்புதல் படிவத்தில் மாணவர்கள் பெற்றோர்களிடம் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்

* வீட்டிலிருந்து குடிநீர் மற்றும் சாப்பாடு கண்டிப்பாக எடுத்துவர வேண்டும்

* பள்ளி வளாகத்தில் முகக்கவசம் அனிதல், தனி நபர் இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

* அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும்

* பேருந்து பயன்பாட்டை குறைத்து சைக்கிளில் பள்ளிக்கு வர வேண்டும்

* குடும்பத்தில் யாருக்கேனும் கரோமா தொற்று அறிகுறி இருப்பின் பள்ளிக்கு வருவதை தவிர்த்து, உரிய மருத்துவ உதவியை நாட வேண்டும்.

* மாணவர்கள் பஸ் பாஸ்க்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி பேருந்தில் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம்

* குப்பைகளை அதற்குரிய தொட்டிகளில் மட்டுமே பிரித்து போட வேண்டும்

*உணவுக்கு முன்றும், பின்னும் சோப்புகளால் நன்கு கைகழுவ வேண்டும்

* நீளமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் மட்டுமே அமர வேண்டும்

* பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உரிய கால அவகாசம் வழங்கி பொதுத்தேர்வு நடத்தப்படும் என்பதால் வினாக மாணவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் செய்யக்கூடாதவை

* கண், காது, முக்கு வாய் பகுதிகளை அடிக்கடி தொடுதல் கூடாது

* உணவுப்பொருட்கள், பேளா, பென்சில் உட்பட எதையும் மற்றவர்களுடன் பகிரக்கூடாது

* கூட்டம் கூடுவதை தவிர்ப்பதுடன், பிறரை தொட்டு பேசுதலுக்கும் இடம்தரக் கூடாது

* பள்ளி வளாகங்களில் சுற்றுச்சுவர்கள், நுழைவு வாயில் கதவுகள், வகுப்பறை கதவுகள் உள்ளிட்ட பகுதிகளை தேவையின்றி தொடுதல் கூடாது

* கட்டுப்பாடு பகுதிகள் அல்லது தொற்று பாதிப்புள்ள வீடுகளுக்கு செல்லக்கூடாது

* பள்ளி வளாகங்களில் கை கழுவும் பகுதிகளை தவிர்த்து, மற்ற இடங்களில் மாணவர்கள் எச்சில் துப்புதல் கூடாது

* முகக்கவசம் உட்பட கழிவுப் பொருட்களை பொதுவெளியில் எறிதல் கூடாது

* மாணவர்கள் தூய்மையற்ற முகக்கவசங்களை அனிதல் கூடாது

* கழிப்பறைக்கு சென்று திரும்பும் வரை தேவையற்ற பகுதிகளை தொடக்கூடாது

* முகக்கவசங்களின் முன்பகுதியை அடிக்கடி தொடுதல் கூடாது

* இணை நோயறு நிலைமைகளை கொண்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உரிய அனுமதியின்றி பள்ளிக்கு வரக்கூடாது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews