மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، سبتمبر 17، 2021

Comments:0

மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த வேண்டாம் மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தும் கால கட்டம் இதுவல்ல என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்தார்.


சென்னை டி.பிஐ வளாகத்தில், பள்ளிக் கல் வித்துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய அறிவிப்புகள் குறித்து துறை சார்ந்த அதிகாரி களுடன் அமைச்சர் வியாழக்கிழமை ஆலோ சனை நடத்தினார். இதில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மேலாண்மை இயக்கு நர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 28 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்புக்கு ஒருவர் பொறுப்பு என்பதுபோல் அதிகாரிகளுக்கு பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. திட்டங்களைச் செயல்படுத் தும்பணிகளில் அதிகாரிகள் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர். முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு:


மானியக் கோரிக்கையின் போது அனைத்துத் தரப்பினர் பாராட்டை பெற்றிருந்தாலும் அறி வித்த திட்டங்களை நிறைவேற்றினால்தான் அடுத்த கூட்டத் தொட ரிலும் பாராட்டைப் பெறமுடியும். அதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.


பள்ளிகள் திறப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரி களுக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. இது தொடர்பாக முதல்வ ரிடம் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோச னைக்கு பிறகு முதல்வர் முடிவெடுப்பார்.


வற்புறுத்த வேண்டாம்: மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப் படுத்தும் காலகட்டம் இதுவல்ல; மாணவர்களை கட்டாயம் பள் ளிக்கு வர யாரும் வற்புறுத்த வேண்டாம். 9 முதல் பிளஸ் 2 வரையான பள்ளிகள் திறந்த பிறகு இதுவரை148 மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற் றைக் காட்டிலும் மிகப் பெரிய பாதிப்பாக இருப்பது மாணவர் களின் மன ரீதியான பாதிப்புதான். இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.


பள்ளிகளில் இடைநிற்றல் குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி களை விரைந்து மேற்கொள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறி வுறுத்தியுள்ளோம். இடைநிற்றல் குழந்தைகளைக் கண்டறிந்து மீண் டும் பள்ளிகளுக்கு வர வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை. தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீட் தேர்வின் முடிவின் அடிப்படையில் பயிற்சி முறைகளை மேம்படுத்துவதா அல்லது மாணவர்களின் திறனை மேம்படுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة