8 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு: பள்ளிக்கு 3 நாள் விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، سبتمبر 15، 2021

Comments:0

8 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு: பள்ளிக்கு 3 நாள் விடுமுறை

திருப்பூர் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், பயிலும் 8 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அப்பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. சில பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறார்கள்.


அந்தவகையில் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கொரோன தொற்று ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் 220 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் அந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் 11 ஆசிரியர்களுக்கும் கோரோன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் 8 மாணவர்களுக்கு கோரோன நேற்று உறுதி செய்யப்பட்டது.


இதன் காரணமாக அந்த பள்ளிக்கு இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் (15ம் தேதி முதல் 17ம் தேதி வரை) என 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களிடம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த பள்ளியில் 9ம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோன பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 8 மாணவர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் 3 நாள்களுக்குப் பள்ளி மூடப்பட்டது.


தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் பிளஸ் 2 வரையில் உள்ள வகுப்புகள் செயல்பட அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் 8 பேருக்கு செவ்வாய்க்கிழமை இரவு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் உத்தரவின்பேரில் சின்னசாமி அம்மாள் பள்ளி புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாள்களுக்கு மூடப்படவுள்ளது.


இதைத் தொடர்ந்து, பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், பிளஸ் 2 மாணவர்களுக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة