கற்றல் இடைவெளியை குறைக்க திட்டம் - 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடிவினா நடத்த உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، سبتمبر 18، 2021

Comments:0

கற்றல் இடைவெளியை குறைக்க திட்டம் - 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடிவினா நடத்த உத்தரவு.

இன்று முதல் பள்ளிகளில் தொடக்கம்


9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடிவினா நடத்த உத்தரவு- கற்றல் இடைவெளியை குறைக்க திட்டம்


செப்.18:அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு பயி லும் மாணவர்களுக்கு இன்று முதல் சனிக் கிழமைதோறும் அடிப் படை வினாடி வினா பாடங்களை நடத்த உத் தரவிடப்பட்டுள்ளது.


எஸ்எஸ்எல்சி மாணவர்களின் கற் றலை மேம்படுத்தவும், கோவிட் காரணமாக ஏற்பட்ட கற்றல் இடை வெளியை குறைக்கவும், இன்று (18ம் தேதி) முதல் ஒவ்வொரு சனிக்கிழமை யும் ஹைடெக்லேப் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 9 மற் றும் 10ம் வகுப்புகளின் கற் றல் விளைவுகளின் அடிப்ப டையில், அடிப்படை வினாடி வினாக்களை நடத்திட பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் அறிவு றுத்தியுள்ளார். தமிழ் ஆங்கிலம் பாடங்களில் 5 பலவுள் தெரிவு வினாக்களும், 5 இலக்கணம் மற்றும் மொழியறிவு சார்ந்த பல வுள் தெரிவு வினாக்களும் கேட்கப்படும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் 10 பல வுள் தெரிவு வினாக்களும்அடிப்படை வினாடி வினாவாக கேட்கப்ப டும். அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசி ரியர்களும் இத்தகைய வினாடி வினா நிகழ் வுகளை இன்று (18ம் தேதி) காலை 9 மணி முதல் 5 மணிக்குள் ஹைடெக் லேப்பில் உள்ள கணினிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்களை ஒவ்வொரு குழுவாக பிரித்து, ஒரு மணி நேரம் 30 நிமிடம் கால அவகாசம் அளித்து நடத்தி முடித்திட வேண்டும்.


பள்ளிகளில் நடக்கும் இத்தகைய செயல்பாடு களை அந்தந்த மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் கண்காணித்திட வேண் டும். அனைத்து மாணவர் களுக்கும் இன்று மாலை 5 மணிக்குள் வினாடிவினா நடத்தி முடிக்கப்படவேண் டும். ஒருவேளை அரசுபள்ளிகள் இன்று நடத்த முடியாவிட்டால், வரும் செவ்வாய் கிழமையன்று இப்பணிகளை கட்டாயம் நடத்தி முடித்திட வேண் டும். இத்தேர்வு முடிந்த வுடன், அடுத்த பள்ளி வேலை நாளில் வினா விடைகள் முதன்மைக் கல்வி அலுவலர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை அரசு பள் ளிகளின் பாட ஆசிரியர் கள் விடைகளை வைத்து மாணவர்களிடம் கலந்து ரையாட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர கம் அனுப்பியுள்ள உத்தர வில் தெரிவிக்கப்பட்டுள் ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் களுக்கான போட்டி நடத் திட ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة