அரசு வேலைக்காக பதிவு செய்து 71.55 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 19, 2021

Comments:0

அரசு வேலைக்காக பதிவு செய்து 71.55 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை தகவல்

தமிழகத்தில் அரசு வேலைக்காகவேலைவாய்ப்பு அலுவலகங்களில் 71.55 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.


மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் (சென்னை மற்றும் மதுரை)இயங்கி வருகின்றன. இவற்றில்பதிவு செய்பவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வர வேண்டும். அப்போதுதான் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடைமுறையில் இருக்கும். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 31.8.2021 நிலவரப்படி, பதிவுதாரர்களின் எண்ணிக்கை விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ளார். அதன்படி, ஒட்டுமொத்தமாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 71 லட்சத்து 55 ஆயிரத்து 917 ஆகும்.


இதில், 24 முதல் 35 வயதுக்கு உட்பட்ட பதிவுதாரர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 59 ஆயிரத்து 276 ஆக உள்ளது. 36 வயதுமுதல் 57 வயது வரை உள்ளவர்கள் 13 லட்சத்து 4 ஆயிரத்து 299 பேர். இடைநிலை ஆசிரியர்பயிற்சி முடித்துவிட்டு பதிவு செய்திருப்பவர்கள் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 612 பேர். இளங்கலை பட்டப் படிப்புடன் பிஎட். முடித்திருப்பவர்கள் 3 லட்சத்து 50 ஆயிரத்து 455 பேர் ஆவர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews