பள்ளிக் கல்வித்துறையில் 1,400 ஆசிரியா் பணியிடங்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் 2009-2010-ஆம் கல்வியாண்டு அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின்கீழ் தரமுயா்த்தப்பட்ட உயா்நிலைப் பள்ளிகளுக்கு 1,200 பட்டதாரி ஆசிரியா் மற்றும் 200 உடற்கல்வி ஆசிரியா் என மொத்தம் 1,400 பணியிடங்கள் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டன. இந்த பணியிடங்களுக்கான பணிக்காலம் கடந்த மே மாதத்துடன் முடிந்துவிட்டன.
இந்த 1,400 பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வரை (2021-2024) தொடா் நீட்டிப்பு வழங்கக் கோரி பள்ளிக்கல்வி ஆணையா் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தாா். அதை பரிசீலனை செய்து 1,400 ஆசிரியா் பணியிடங்களுக்கு 2024-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறுஆய்வில் முடிவெடுக்கும் வரை தொடா் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் 2009-2010-ஆம் கல்வியாண்டு அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின்கீழ் தரமுயா்த்தப்பட்ட உயா்நிலைப் பள்ளிகளுக்கு 1,200 பட்டதாரி ஆசிரியா் மற்றும் 200 உடற்கல்வி ஆசிரியா் என மொத்தம் 1,400 பணியிடங்கள் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டன. இந்த பணியிடங்களுக்கான பணிக்காலம் கடந்த மே மாதத்துடன் முடிந்துவிட்டன.
இந்த 1,400 பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வரை (2021-2024) தொடா் நீட்டிப்பு வழங்கக் கோரி பள்ளிக்கல்வி ஆணையா் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தாா். அதை பரிசீலனை செய்து 1,400 ஆசிரியா் பணியிடங்களுக்கு 2024-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறுஆய்வில் முடிவெடுக்கும் வரை தொடா் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.