சட்ட படிப்புக்கான சேர்க்கை 'ஆன்லைன்' பதிவு ஆரம்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 05, 2021

Comments:0

சட்ட படிப்புக்கான சேர்க்கை 'ஆன்லைன்' பதிவு ஆரம்பம்

தமிழக சட்ட பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், ஐந்து ஆண்டு படிப்புக்கான மாணவர் சேர்க்கை பதிவு நேற்று துவங்கியது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையான, தமிழக சட்ட பல்கலையின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், ஆன்லைன் வழியில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு துவங்கியது. மாணவர்கள், http://tndalu.ac.in/ என்ற இணையதளம் வழியே, விண்ணப்ப விபரங்களை பதிவு செய்யலாம். வரும், 26ம் தேதி வரை பதிவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பல்கலையின் நேரடி கல்லுாரியான சீர்மிகு சட்ட கல்லுாரியில், பி.பி.ஏ., - - பி.சி.ஏ., - பி.ஏ., - பி.காம்., ஆகிய படிப்புகளுடன், எல்.எல்.பி., படிப்பும் சேர்த்து, ஐந்து ஆண்டுகள் நடத்தப்படுகிறது. ஒரு படிப்புக்கு, 156 மாணவர்கள் வீதம் மொத்தம், 624 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

அதேபோல, சட்ட பல்கலையின் இணைப்பில், பல்வேறு மாவட்டங்களில் இயங்கும், 13 அரசு சட்ட கல்லுாரிகள்; திண்டிவனத்தில் செயல்படும் சரஸ்வதி தனியார் சட்ட கல்லுாரி ஆகியவற்றில், 1,651 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.'இந்த மாணவர் சேர்க்கையில், வழக்கமான இட ஒதுக்கீட்டு விதிகள், வன்னியர்களுக்கான, 10.5 சதவீத இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுகிறது. 'அதேபோல, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அரசாணை வந்ததும் பின்பற்றப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews