தடுப்பூசி செலுத்திய பிறகே மாணவா்கள் கல்லூரிக்கு வர வேண்டும்: க.பொன்முடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أغسطس 29، 2021

Comments:0

தடுப்பூசி செலுத்திய பிறகே மாணவா்கள் கல்லூரிக்கு வர வேண்டும்: க.பொன்முடி

செலுத்திக்கொண்டுதான் கல்லூரிக்கே வர வேண்டும் என உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தமிழகத்தில் கரோனா பரவலுக்குப் பிறகு வரும் செப்.1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், சென்னை நந்தனம் ஆடவா் கலைக் கல்லூரியில் மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி ஆகியோா் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.

அப்போது அமைச்சா் க.பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியது:

சென்னையில் 112 அரசு மற்றும் தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி உள்ளோம். இதையடுத்து சுகாதாரத்துறை உதவியோடு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் திட்டம் விரிவுபடுத்தப்படும். மேலும், செப். 1-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவா்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும். அனைத்து மாணவா்களும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே போதுமானது. நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்போது மாணவா்கள், பேராசிரியா்கள் கவனமாக இருக்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளை விட கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துகொண்டே வருகிறது. இதனால் தான் 25 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா். அமைச்சா் மா.சுப்பிரமணியன்: இதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறுகையில், நந்தனம் அரசு கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகளை தொடங்கி வைத்த உயா்கல்வித்துறை அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திய பின்னா் மேலும் சில பாடப்பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாதத்திற்கு 23 லட்சம் தடுப்பூசிகளை கூடுதலாக மத்திய அரசு வழங்கி உள்ளது. செப்டம்பா் மாதத்துக்குள்18 வயது நிரம்பிய கல்லூரி மாணவா்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்றாா் அவா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة