புதுச்சேரி பல்கலை இணையவழி வகுப்புகள் – புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أغسطس 02، 2021

Comments:0

புதுச்சேரி பல்கலை இணையவழி வகுப்புகள் – புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வழியாக புகைப்படத்துறை மற்றும் இதழியல் இரண்டு புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன இது மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

புதிய பாடங்கள்:

புதுச்சேரியில் மத்திய அரசால் பல்கலைகழகம் இயங்கி வருகிறது. இந்தியப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் மத்திய பல்கலைக்கழக மதிப்பீட்டில் 9-வது இடத்தில் உள்ளது நாட்டின் சிறந்த 10 மத்திய பல்கலைக்கழகங்களில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் ஒன்றாகும். இங்கு கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு வகையான பாட பிரிவுகள் இப்பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றுள்ளது. தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வழியாக புகைப்படத்துறை மற்றும் இதழியல் இரண்டு புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இது மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர்கள் முனைவர் ராதிகா கண்ணா மற்றும் முனைவர் அருள்செல்வன் ஆகியோர் இந்த புதிய பாடங்களை கற்பிப்பார்கள் எனவும் இ பாடப் பிரிவுகளில் சேர்ந்து பயில 1600 க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் விருப்பங்களை தெரிவித்துள்ளனர் என துணைவேந்தர் கூறியுள்ளார்.இந்த புதிய பாடப்பிரிவுகளை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் இன்று காணொலி வழியாக தொடங்கி வைத்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة