வெளிநாட்டில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு - விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 30, 2021

Comments:0

வெளிநாட்டில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு - விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு

விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்

மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவுரைபடியும் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படியும் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழக மக்களுக்கு உடனடியாக அயல் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என முனைவர். சிநமகேஸ்வரன், இஆப, நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து வெளிநாட்டில் பணி அமர்த்த பல்வேறு நாடுகளின் ஆட்சேர்ப்பு நிறுவனங்களை தொடர்பு கொண்டதில் தற்போது கீழ்கண்ட பணியிடங்களுக்கு தேவைப்பட்டியல் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என

கேட்டுக்கொள்ளப்படுகிறது (044-22505886/ 22502267). மேற்காணும் வேலைவாய்ப்பு விவரங்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்

மற்றும் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டடுள்ளது என்றும் முனைவர் சி. ந. மகேஸ்வரன் இஆப், அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.com-ல் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பித்து இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு. வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் எண்.RC.No.B. 0821/CHENNAL/CORPN/1000.5/308/84 ஆகும்.

மேலும் தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டுவேலைவாய்ப்பு நிறுவனம் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் சுரண்டல்களிலிருந்து வெளிநாட்டு வேலைநாடுநர்களை பாதுகாக்கவும் மற்றும் குறைந்த செலவில் பணியமர்த்துவதற்காகவும் 1978ம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம் வெளிநாட்டு வேலைக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு சான்றிதழ் சான்றொப்பம் விசா பெறுவதற்கு உதவிபுரிதல் மற்றும் வெளிநாடு செல்வதற்கு தேவையான பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை செய்துவருகிறது. இந்நிறுவனம் இதுவரை 10,350 நபர்களை பல்வேறு வெளிநாட்டு வேலைகளில் பணியமர்த்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாத ஊதியம் ரூ.200.000- முதல் ரூ.250,000/- வரை சம்பளம் பெறுமானம் உள்ள (டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண்) 300 முதல் 500 செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். 2. பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்ற 30 வயது முதல் 43 வயதுக்குட்பட்ட GCC ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு குவைத் நாட்டில் பணிபுரிய தேவைப்பட்டியல் வந்துள்ளது. மாத ஊதியமாக ரூ.27,000/-முதல் ரூ.34,500/ வரை வழங்கப்படும்.

3 அரபு உணவு வகைகள் சமைக்க ஆண் சமயல்காரர்கள் தேவை பட்டியல் பெறப்பட்டுள்ளது. சமையலருக்கு மாத ஊதியம் ரூ.37,000/ வழங்கப்படும்.

4. குவைத்நாட்டில் வீட்டில் வேலை செய்ய 30 வயது முதல் 40 வயது வரை பெண் பணியாளர்கள் தேவை பட்டியல் பெறப்பட்டுள்ளது. மாத ஊதியம் ரூ.29,640/ ல் ரூ.32,000/- வரை வழங்கப்படும்.

5. Diploma in Mechanical Engineer/ITI Fitter தேர்ச்சி பெற்ற 22 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட Casting Inspection/Machine operator. TAutomobile Foundry) பணிபுரிய ஓமன்நாட்டிற்கு தேவை பட்டியல் வந்துள்ளது. மாதஊதியம் ரூ.29,000/ வழங்கப்படும்.

மேற்படி சம்பளம் விமானப்பயணச்சீட்டு, சேர்க்காமல் பணியாளர்களுக்கு உணவு, ஆகியவைகள் அந்நாட்டின் தனியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பிடம். வேலையளிப்பவரால்

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த www.omcmanpower.com·ல் விவரங்கள் இந்நிறுவன அவ்வப்போது பதிவேற்றம் எனவே வெளிநாட்டில் வேலை செய்ய இந்நிறுவன வலைதளத்தில் தங்கள் விபரங் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews