பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் திறக்க அனுமதி: ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 21, 2021

Comments:0

பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் திறக்க அனுமதி: ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு

"தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 23ஆம் தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தையடுத்து, தமிழகத்தில் பல முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன், ஊரடங்கு மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓணம் கொண்டாடிய நடிகைகள்: புகைப்படத் தொகுப்பைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் இது குறித்து தமிழக அரசு வெளிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு 23ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய்த் தொற்றின் பரவலின் தன்மை, அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில், கரோனா பரவல் கட்டுப்பாடுகள் செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

முன்பே அறிவித்தவாறு இன்று நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும். பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். உயர் வகுப்புகள் செயல்படுவதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கல்லூரிகளும் செப். 1 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அங்கன்வாடி மையங்கள், செப்டம்பர் 1 முதல் மதிய உணவு வழங்குவதற்கு செயல்பட அனுமதிக்கப்படும். என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. முழுமையான விவரம் ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்படும். மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகள் செயல்பட அனுமதிக்கப்படும். தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி." வரும் 23 ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களும், செப்., 1 முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதித்து தமிழக அரசு இன்று (ஆக.21) உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. தற்போதைய ஊரடங்கு வரும் 23ம் தேதி உடன் முடிவடைய நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு வரும் செப்.,6-ம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ அரசு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது, வரும் 23 ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரையில் இயங்க அனுமதி

கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி. பூங்காக்கள் படகு இல்லங்கள் இயங்க அனுமதி கடற்கரை கடைகளின் பணியாளர்கள் சிறுவியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செப்.,1 ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் மதிய உணவு வழங்குவதற்கு அனுமதி.மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதி , பொறுப்பாளர்கள், மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். உரிய வழிகாட்டு நெறி முறைகளின் படி மதிய உணவு திட்டம் செயல்பட அனுமதி
ஆந்திரா கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்திற்கு அனுமதி. நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பேருந்துகளை இயக்க வேண்டும்.

தங்கும் விடுதிகள் கேளிக்கை விடுதிகளில் உள்ள மது கூடங்கள் செயல்பட அனுமதி

செப்., 1 -ம் தேதி முதல் கல்லூரி மற்றும் அனைத்து பட்டய படிப்புகல்லூரிகள் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி

செப்., 1-ம் தேதி முதல் 9,10,11,12 ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படும் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

எல்.கே.ஜி., முதல் முதல் 8 வது வரையிலான வகுப்புகளை திறப்பது குறித்து செப்.,15 ம் தேதிக்கு பின்னர் ஆலோசித்து அறிவிக்கப்படும்.
100 சதவீத பணியாளர்களுடன் ஐ.டி., நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews