மாணவர்கள் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.21 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، أغسطس 17، 2021

Comments:0

மாணவர்கள் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.21

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலூர், ஆக. 16: தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெற்றிட மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழ கங்களில் பயிலும் தமிழக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இது குறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண் டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம், பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத் திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயி லும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளில் குடும்ப ஆண்டு வரு மானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்களுக்கு, கல்வி உதவித் தொகையாக ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2021-22-ஆம் கல்வி ஆண்டுக்கான இக்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி லுள்ளமாவட்டபிற்படுத்தப்பட்டோர்,சிறுபான்மையினர் நலஅலு வலகத்தை அணுகியோ அல்லது tngovtiischolarship@gmail. com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பங்களை 30-ஆம் தேதிக்குள் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2-ஆவது தளம், சேப் பாக்கம், சென்னை - 5. தொலைபேசி எண் 044-28551462 என்ற முக வரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة